அறம்
Thursday, 28 May 2020
Sunday, 29 March 2020
ஒரு ஜென் துறவி காட்டு வழியே போய்க்கொண்டிருந்தார். இரவு. நல்ல குளிர். வழியில் தென்பட்ட ஒரு பவுத்த மடாலயத்தில் தங்கிக்கொள்ள அனுமதி கேட்டு, படுத்தார். நள்ளிரவு குளிர் தாங்கவில்லை. மடாலயத்தில் இருந்த மரத்தாலான சில புத்தர் சிலைகளை எடுத்துக் கொளுத்திப் போட்டுக் குளிர் காயத் தொடங்கிவிட்டார். அந்த மடத்தில் இருந்த துறவிகளுக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. இதென்ன அக்கிரமம்? நீயெல்லாம் ஒரு பவுத்தத் துறவியா? புத்தர் சிலையை எரித்தா குளிர் காய்வாய்?
போட்டுக் குதறிவிட்டார்கள் அந்தத் துறவியை. அவர் சொன்னார்: ‘எனக்குள்ளே இருக்கும் புத்தருக்கு ரொம்பக் குளிர் வந்துவிட்டது. அதனால் இந்தக் கட்டைகளை எரித்து அவருக்கு வெப்பம் கொடுத்தேன். உங்கள் புத்தர் இந்த மரக்கட்டையில்தான் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது!’
போட்டுக் குதறிவிட்டார்கள் அந்தத் துறவியை. அவர் சொன்னார்: ‘எனக்குள்ளே இருக்கும் புத்தருக்கு ரொம்பக் குளிர் வந்துவிட்டது. அதனால் இந்தக் கட்டைகளை எரித்து அவருக்கு வெப்பம் கொடுத்தேன். உங்கள் புத்தர் இந்த மரக்கட்டையில்தான் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது!’
காந்திஜி
“துன்பமும் தீமையும் மிக நெருங்கியவர்களைக் கூட மாற்றார்களைப் போல் ஆக்கிவிடும் என்று யாரோ எங்கேயோ சொல்லியிருக்கிறார்கள் அல்லவா”
காந்திஜி
“பாபு ஏன் கடவுளைப் பற்றி என்னிடம் பேசக்கூடாது?” என்று கேட்டேன். “கடவுள் இருக்கிறார் என்று என்னை நம்பவைக்க தாங்கள் முயன்றிருக்க வேண்டும்” என்றும் கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே "எனக்குக் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கை உண்டு என்று நான் எண்ணியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அவ்வளவு நிச்சயமாகத் தெரியாது. ஆனாலும் அதன்படி வாழ வேண்டும் என்று நான் முயலுகிறேன். எனது வாழ்க்கை அந்த விஷயத்தைக் கற்பிக்கவில்லையெனில் எனது வாய் வார்த்தை ஒருபொழுதும் வெற்றி பெறாது. அதனால் நான் முயலவில்லை” என்று கூறினார்.
நினைவிருக்கட்டும். அவர் வேலை வாங்குவதில் மிகக் கறார் பேர்வழி. ஓ! அவர் என் விஷயத்தில் அநீதி இழைப்பதாக எண்ணி நான் எத்தனையோ தடவை அழுதிருக்கிறேன். நான் சிறுதவறு செய்துவிட்டாலும் அவர் என்னைக் கடுமையாக நடத்துவார். என்னைக் கண்ணீர் விட்டு அழவைத்துவிடுவார். அப்புறம் “உன் கண்ணீருக்கு நான் இரங்கமாட்டேன். ஏனெனில் கண்ணீர் கோபத்தின் அறிகுறியே தவிர வருத்தத்தின் அறிகுறி அல்ல. கோபத்தையும் வருத்தத்தையும் மயிரிழைக் கோடுதான் இனம் பிரிக்கிறது” என்று கூறுவார்.
மீரா பென் காந்திஜி குறித்து~அவர் ஒருநாளும் தம்மை உயர்ந்தவர் என்றோ, புரிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ எண்ணியதில்லை. ஆனாலும் அவர் நம்மைவிட எவ்வளவோ பெரியவர். அவரது எளிமை கபடமற்ற தன்மை காரணமாகவேகூட நம்மால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எவ்வளவு பெரியவர் என்பதை இன்று என்ன, என்றுமே நாம் உணரவில்லை.
காந்திஜி
“பாபு ஏன் கடவுளைப் பற்றி என்னிடம் பேசக்கூடாது?” என்று கேட்டேன். “கடவுள் இருக்கிறார் என்று என்னை நம்பவைக்க தாங்கள் முயன்றிருக்க வேண்டும்” என்றும் கூறினேன். அவர் சிரித்துக்கொண்டே "எனக்குக் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கை உண்டு என்று நான் எண்ணியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அவ்வளவு நிச்சயமாகத் தெரியாது. ஆனாலும் அதன்படி வாழ வேண்டும் என்று நான் முயலுகிறேன். எனது வாழ்க்கை அந்த விஷயத்தைக் கற்பிக்கவில்லையெனில் எனது வாய் வார்த்தை ஒருபொழுதும் வெற்றி பெறாது. அதனால் நான் முயலவில்லை” என்று கூறினார்.
நினைவிருக்கட்டும். அவர் வேலை வாங்குவதில் மிகக் கறார் பேர்வழி. ஓ! அவர் என் விஷயத்தில் அநீதி இழைப்பதாக எண்ணி நான் எத்தனையோ தடவை அழுதிருக்கிறேன். நான் சிறுதவறு செய்துவிட்டாலும் அவர் என்னைக் கடுமையாக நடத்துவார். என்னைக் கண்ணீர் விட்டு அழவைத்துவிடுவார். அப்புறம் “உன் கண்ணீருக்கு நான் இரங்கமாட்டேன். ஏனெனில் கண்ணீர் கோபத்தின் அறிகுறியே தவிர வருத்தத்தின் அறிகுறி அல்ல. கோபத்தையும் வருத்தத்தையும் மயிரிழைக் கோடுதான் இனம் பிரிக்கிறது” என்று கூறுவார்.
மீரா பென் காந்திஜி குறித்து~அவர் ஒருநாளும் தம்மை உயர்ந்தவர் என்றோ, புரிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ எண்ணியதில்லை. ஆனாலும் அவர் நம்மைவிட எவ்வளவோ பெரியவர். அவரது எளிமை கபடமற்ற தன்மை காரணமாகவேகூட நம்மால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் எவ்வளவு பெரியவர் என்பதை இன்று என்ன, என்றுமே நாம் உணரவில்லை.
Sunday, 2 December 2018
Saturday, 1 December 2018
Subscribe to:
Posts (Atom)
